குறுந்தொகை 94

 கதக்கண்ணன் பாடிய 94 பாடல்
   
   பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து 

அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;
யானே மருள்வென்தோழி! பானாள்
இன்னும் தமியர் கேட்பின்பெயர்த்தும்
என் ஆகுவர்கொல்பிரிந்திசினோரே?
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே

உரை:-
  
   அன்றி ஒரு நாள் முல்லை நிலத்தில் பெரும் மழை பொழிய தொடங்கியது, மழை பொழிந்தது முல்லை நிலத்தில் உள்ள பிச்சிப்பூக்கள் அரும்புகள் சிவந்து உள்ளது அதை கண்டு அவளும் கார் காலம் வந்துவிட்டது என்பதை என்னி வியப்படைகிறாள்,
 கார் காலத்திற்குள் வருவேன் என்ற சொன்ன தலைவனும் வரவில்லை மழைகாலத்தில் இடியின் குரல் கேட்கும் போது அவரு என்ன ஆகுவாரே என்ற கவலையில் முல்லை நிலத்தில் இடைச்சி தன்னோட கணவனை என்னி புலம்புகிறாள்,  இவை தான் முல்லை நில ஆய்ச்சியின் பண்பும் கலக்கமும்,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்