குறுந்தொகை 220

ஒக்கூர் மாசாத்தி பாடிய பாடல் 220

    ழ மழைக் கலித்த புதுப் புன வரகின்


இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்னபசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும்வாரார்;
கண்டிசின் தோழி! பொருட் பிரிந்தோரே.

 உரை;-
    முல்லை நிலத்தில் 
மழைகாலம் முடிந்த பிறகு முல்லை நிலத்தில் வரகு விளைந்துருக்கிறது அதை  மேய்வதற்கு ஆண் மான் வரகு கதிர்களை மேய்கிறது,அதனால் கதிர்கள் குன்றி தெரிகிறது, அதன் அருகிலே மலர்ந்த முல்லை மலர்கள்  அதை பார்க்கும் போது காட்டுப்பூனைகள் சிரிக்கும் போது அதன் பற்கள் போல சிறிய அரும்புகளுடம் முல்லை மலர் பூத்துருக்கிறது,அம்முல்லை நிலத்தில் சிறிய இதழ்கள் போன்ற மலர்களில் தேன் எடுக்கு வண்டுகள் சுற்றி சுற்றி வருகிறது, ஆனால் என் தலைவரோ என்னை சுற்றிவர இன்னும் வரவில்லையே என்று மனம் ஏங்குகிறது,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்