குறுந்தொகை 190

பூதம்புல்லன் பாடிய பாடல் 190

   நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,

செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி! பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக்  குரலே?


உரை;-
  \
    முல்லை நில இடைச்சியின் மனம்
பொருள் தேட சென்ற எம் தலைவர் காட்டில் வழியே செல்வார் அவர் செல்லும் வழியில் பாம்பின் தலை தரையில் விழும் போது ஏற்படும் சத்தம் போல தொழுவத்தில் கட்டிய பசுகளின் கழுத்தில் இருக்கும் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும் அதன் சத்ததில் நான் உறங்க மாட்டேன் என்று அவருக்கு தெரியும் வளையல்கள் அசையும் சத்தம் கேட்கும்படி என்னை விட்டுவிட்டு சென்றிவிட்டார்

 இந்த இடத்தில் வளையல்கள் சத்தம் கேட்கும் படி என்றால் 
தூங்காமல் அங்கும் இங்கும் பிரலும் போது ஏற்படும் சத்ததை கூறிக்கிறது,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்