குறுந்தொகை 233

பேயன் பாடிய பாடல் 233
    கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி

கொன்றை ஒள் வீ தாஅய்செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன 
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில்யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி,
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே.

உரை;-

    முல்லை நில ஆயன் கூற்று
என் காதலியோ அவள் கையில் சிறிய ஆழகான வளையல்கள் அணிந்துருப்பாள் அவளின் தந்தை பெரிய செல்வந்தர்,உயர்நத பண்புகள் உடையவர்களுக்கு நீருடன் செல்வத்தையும் சேர்ந்து குடுத்தது போக மீதம் உள்ளதை எல்லாருக்கும் குடுத்து உதவும் ஊர் அந்த ஊர் 
அவ்வூர் முல்லை நிலத்தில் இருக்கிறது, இவ்வூரில் சிறுவர்கள் விளையாடும் போது ஏற்படும் குன்றுகளில் உதிர்ந்து கிடக்கும் கொன்றை மலர் போல அவளின் தந்தையில் பொன்னிகள் (தங்கம் போனற) பெட்டிகள் திறந்தே இருக்கும் அப்படி பட்டி வள்ளல் அவளின் தந்தை

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்