குறுந்தொகை 167
கூடலூர் கிழார் பாடிய பாடல் 167
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
''இனிது'' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே,
உரை;-
முல்லை நில தலைவியின் காதல்,
அன்று ஒரு நாள், கணவனுக்காக இடைச்சி சமைக்கிறாள் அதோட காட்சியா காணுவோம்
காந்தள் மலர்போல சிவந்த கையால் நன்றாக மோரை கலக்கிறாள் அப்போது அவளோட மேனியில் இருத்து ஆடை நழுவுகிறது, அதை தன்னோட ஈரகையால் அந்த மென்னிய ஆடைய சரி செய்து, எண்ணெய் ஊற்றி மோர் குழம்பை தாளிக்கிறாள் இடைச்சி,அதில் ஏற்படும் புகை குவளை பூ போன்று இடைச்சியின் கண்ணில் பட்டு கண்கள் எரிகிறது,அதையும் பொருட்படுத்தாமல் தன் கணவனுக்கு புளித்த போர் குழம்பை சமைத்து குடுக்கிறாள்,அதை ஆயன் சாப்பிடும் போது அதோட சுருசியாள் ஆவ்வாயன் ஆகா ஓகோ இனிது என்று ருசித்து சாப்பிடும் போது இடைச்சியின் முகம் முல்லை மலர் போல மலர்கிறது
Comments
Post a Comment