குறுந்தொகை 210

காக்கை பாடினியார் நச்செள்ளையார் 
பாடல் 210



   திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின்தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே

உரை;-
   முல்லை நிலத்தில்  பசுக்கள் நிரைந்தது அவ்வூர், 
அவ்வூரில் இருக்கும் தலைவி தன்னோட தோழியிடம்  என்னவரை காணமல் தோள் மெலிந்து வாடுகிறேன்,என்று கூறும் போது காக்கை கரைகிறது,அதை கண்ட இடைச்சி காக்கை கரைந்தால் விருந்தினர் வருகிறார்,
என்னவர் தான் தான் வருகிறார் என்ற செய்திய காக்கை சொல்கிறது, இப்படி ஒரு நல்ல செய்திய சொல்லும் காக்கைக்கு நாம் என்ன செய்யலாம்,
  இடையர் வந்ததும்   திடமான தேரினை உடையவர் நள்ளி அவரின் காட்டில் வாழும் பசுவில் பால் பீச்சி அதில் இருந்து நெய் எடுத்து, தொண்டியில் விளைந்த நெல்அரிசியில் சொறாக்கி அதை செய்யில் பிசைந்து அதை ஏழு பாத்திரங்களில் வைத்து அக்காக்கைக்கு குடுக்க வேண்டும் அப்படி செய்தால அவை சிறிதளவு அக்காக்கைக்கு கைமாரு செய்ததாக இருக்கும்


  நள்ளி என்பவன் கடேயேழு வள்ளல்களில் ஒருவன், அவன் நாட்டில் வாழும் பசுக்கள் பாலின் பெருமையும், தெண்டி ஊரில் விளையும் அரிசிக்கு அவ்வளவு மதிப்புள்ளது, என்பதை சொல்கிறது,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்