குறுந்தொகை 251


இடைக்காடர்  பாடிய பாடல் 251


  மடவ வாழி மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தெனஅதன் எதிர்
ஆலலும் ஆலினபிடவும் பூத்தன;
கார் அன்று இகுளை! தீர்கநின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇயஉகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே


உரை;-
     முல்லை நிலமும் கார்காலமும் இடைச்சியின் வாழ்வோடு,
முல்லை நில தலைவி தலைவன் கார்காலத்தில் வந்துவிடுவேன் என்று கூறிய காலம் வந்தது அதை என்னி தலைவி வருந்துகிறாள்,அதை அறிந்த தோழி,
அன்பு தோழியே 
மேகம் புதிய நீர் மீது ஆசை கொண்டு பழைய நீரை கொட்டிவிட்டது, அதை அறியாமல் மயில்களும் புத்தி இல்லாமல் அதில் ஆடவும் செய்கிறது, 
மடதனமாக காட்டுமல்லியும் பூத்துவிட்டது, மேகத்துக்கோ பகை வான்த்தின் மீது  அதனால் மோதி இடி இடிக்கிறது, நீ அதை என்னி கலங்காதை என்று தலைவியிடம் கூறிகிறாள் தோழி,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்