குறுந்தொகை 98

கோக்குளமுற்றன் பாடிய பாடல் 98

   இன்னள் ஆயினள் நன்னுதல்'' என்று, அவர்த்

துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி தோழி! நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.

 உரை:-

    முல்லை நிலத்தில் அது ஒரு அழகிய கிராமம், அந்த கிராமத்தில் கார்காலம் வந்தும் அன்று வரவேண்டிய தலைவன் வரவில்லை என்பதால் ஆய்ச்சி மிகுந்து வேதனையில் இருக்கிறாள், அப்போது தன்னோட தோழியிடம் சொல்கிறாள், அடியே தோழி நீ சென்று என் கணவரிடம் சொல்வாயா  உன்னோட தலைவி உன்னை பார்க்காத காரணத்தால்  கண்ணீர் சிந்தி அவலோட உடல் பீர்க்கங்காய் பூவின் அரும்பி போல ஆகிவிட்டது, நீ வந்து அவளே பார்ப்பாயா என்று,

 மூவாயிரம் ஆண்டுகள் முன்பு முல்லை நிலத்தில் நடந்த ஒரு காட்சி  ஆயிரம் ஆண்டுகள் முன்பே வீடுகளில் பீர்க்கங்காய் சாகுபடியும் முல்லைநிலத்தில் நடந்துள்ளது,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்