குறுந்தொகை 64

கருவூர்க் கதப்பிள்ளை பாடிய பாடல் 64

    பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கிமாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர் தோழி! சேய் நாட்டோரே.
  
  உரை :-
     அன்று ஒரு நாள் முல்லை நிலத்தில் பொருள் தேடி சென்ற தலைவன் வரவில்லை என்ற கவலையில் இருந்த நேரத்தில் கோவலர்கள் பலவகை பசுகளை மேய்ச்சலுக்கு சென்று மேய்த்துவிட்டு மாலை நேரத்தில் இல்லத்திற்கு பத்திக்கொண்டு வருவார்கள், அது தெரியாமல் கன்றுகள் கத்துக்கொண்டு இருக்கும், அதே போல அதிக. தூரம் சென்ற கணவன் திரும்பி வந்துக்கொண்ட இருப்பார் என்ற நினைத்துக்கொண்டு கவலையில் இருக்கிறார்,

     முல்லை நிலத்தின் காத்தலும் இருத்தலும் வாழ்க்கைய இருந்த காலம்

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்