நற்றிணை 381
அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்'' எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை 5
யாங்கனம் தாங்குவென் மற்றே? ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே. 10
பொருள்:-
அவர் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்தும் அவர் வரவில்லை. அவர் வராத துன்பத்தில் வருந்தும் நான் சாவேன் என்பது உண்மை. இவ்வாறு சொல்லிக்கொண்டு சாவாமல் இருக்கும் ஒருத்தி அல்லேன் நான். கரையை இடித்துக்கொண்டு காட்டாற்று வெள்ளம் வரும்போது, வேர் அரிக்கப்பட்டு நிற்கும் மரா-மரத்துத் தளிர் போல நடுங்காத நெஞ்சத்தோடு இருக்கிறேன். இந்த நிலையில் என் துன்பத்தை எவ்வாறு தாங்கிக்கொள்வேன்? அதியமான் நெடுமான் அஞ்சி ஆண்யானை மேல் இருந்துகொண்டு, புகழை விரும்பி, ஈரமுள்ள அன்பு நெஞ்சத்தோடு, யானைகளைக் கொடையாக வழங்ககுவான். அவன் இருக்கை கொண்டுள்ள யானை போல் இருண்டு, அவன் கொடை போல் மழை பொழிகிறதே! அவர் வரவில்லையே.
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை 5
யாங்கனம் தாங்குவென் மற்றே? ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே. 10
பொருள்:-
அவர் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்தும் அவர் வரவில்லை. அவர் வராத துன்பத்தில் வருந்தும் நான் சாவேன் என்பது உண்மை. இவ்வாறு சொல்லிக்கொண்டு சாவாமல் இருக்கும் ஒருத்தி அல்லேன் நான். கரையை இடித்துக்கொண்டு காட்டாற்று வெள்ளம் வரும்போது, வேர் அரிக்கப்பட்டு நிற்கும் மரா-மரத்துத் தளிர் போல நடுங்காத நெஞ்சத்தோடு இருக்கிறேன். இந்த நிலையில் என் துன்பத்தை எவ்வாறு தாங்கிக்கொள்வேன்? அதியமான் நெடுமான் அஞ்சி ஆண்யானை மேல் இருந்துகொண்டு, புகழை விரும்பி, ஈரமுள்ள அன்பு நெஞ்சத்தோடு, யானைகளைக் கொடையாக வழங்ககுவான். அவன் இருக்கை கொண்டுள்ள யானை போல் இருண்டு, அவன் கொடை போல் மழை பொழிகிறதே! அவர் வரவில்லையே.
Comments
Post a Comment