நற்றிணை 374
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை 5
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?
பொருள்:-
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை 5
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?
பொருள்:-
முரம்பு நிலத்து வழியில், உயர்ந்து தோன்றும் சிறுகுடி என் ஊர். அது உமணர் வாழும் ஊர்.
ஊரின் புறப்பகுதி புளிய மரத்தில் இருக்கும் புளியம்பழத்தைத் தின்று பசியைப் போக்கிக்கொண்டு, தலைக்கு மேல் குடை பிடித்துக்கொண்டு, வந்துகொண்டிருக்கும் புதியவர்களே!
எண்ணிய அனைத்தையும் நாம் பெற்றிருக்கிறோமா? இல்லையே!
என் மனைவி நீண்ட கூந்தலை உடையவள். அது தாழ்ந்து தொங்கும் கூந்தல். மணி போல் நிறம் கொண்ட கூந்தல். ஒப்பனை செய்யப்பட்ட கூந்தல்.
அவள் கண்ணீர் ஒழுகி அதன் திவலைப் புள்ளிகள் தன் மார்பகத்தில் நனையும்படி வருந்திக்கொண்டிருப்பாள். என்னுடன் சேர்ந்து விருந்தினரைப் பேணவேண்டும் என்னும் விருப்பத்துடன் ஏங்கி வருந்திக்கொண்டிருப்பாள். நான் அணிவித்த திருந்திய அணிகலனோடு இருப்பாள். அவள் அரிவைப் பருவத்தவள். தேன் போன்று பேசுபவள்.
அவளோ, நானோ, எண்ணிய அனைத்தையும் பெற்றிருக்கிறோமா?
குடை பிடித்துக்கொண்டு வருபவரை அந்தணர் எனல் பொருத்தமானது.
துய்த்தல் பற்றிய வினா அவரிடம் எழுப்புவதும் தகும்
Comments
Post a Comment