நற்றிணை 364
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் 5
வாழலென் வாழி தோழி! ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப, 10
உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.
பொருள்:-
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் 5
வாழலென் வாழி தோழி! ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப, 10
உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.
பொருள்:-
கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன் என்று அவர் சொல்லிச் சென்ற பருவம் கழிந்துவிட்டது. பகலிலும், மயங்கும் இருளோடு கூடிய நள்ளிரவிலும், மேகக் கூட்டத்தோடு தோன்றி, இடி முழங்கும் வானம், மழை பொழிகிறது. பனியோடு கூடிய வாடைக்காற்று சினம் கொண்டது போல் வீசுகிறது. இன்னும் சிலநாள் அவர் வராமல் பனிக்காற்று வீசிக்கொண்டிருந்தால், தோழி, நான் உயிர் வாழமாட்டேன்.
பசுவின் கழுத்தில் மணி கட்டியிருக்கின்றனர். அந்த மணி முறையாக (ஊழின்) ஒலிக்கும். இடி போல் முழங்காத இனிய இசையுடன் ஒலிக்கும். அந்த இசை ஊரெல்லாம் கேட்கிறது. பசுக்களை மேய்க்கும் கோவலர் அவற்றை ஓட்டிக்கொண்டு இல்லம் திரும்புகின்றனர். இசை கற்காத அந்தக் கோவலர் கொன்றைக் காயில் செய்த குழலை ஊதுகின்றனர், அவர்கள் குழல் ஊதும் இசை ஊரின் பொதுமன்றத்தில் ஆங்காங்கே ஒலிக்கிறது. இந்த ஒசை என் உயிரை விரைந்து செல்லும்படி முடுக்குகிறது (துனைதரும்). இது மாலை வேளை. அத்தோடு குற்றமற்ற பதமான மழையும் பொழிகிறது. இவை அனைத்தும் ஒருங்கு வந்து தாக்கினால் என் உயிர் நிற்குமா?
இப்படித் தலைவி தன் ஆற்றாமையைத் தன் தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள்.
Comments
Post a Comment