குறுந்தொகை 240
கொல்லன் அழிசி பாடிய பாடல் 240
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி தோழி! தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.
உரை:-
முல்லை நிலத்தில் தலைவியின் மனம்
பனியில் பூக்கும் அவரை கிளியில் வாய் போல தோற்றத்துடன் மலர்ந்துள்ளது, முல்லை நிலததில் காட்டு பூனை போன்று முல்லை மலர்களும் மலர்ந்து இருக்கிறது, அவற்றின் மீது பட்டு வாடைக்காற்றும் வீசுகிறது, தோழி அங்கே பார் கடலில் மூழ்கும் கப்பல் போல கதிரவனும் மலையில் மறைகிறான், என் கணவரை தேடி என் மனம் ஏங்குகிறது,
என்று முல்லை நில காதல் இன்னும் நெஞ்சில் இருக்கிறது
Comments
Post a Comment