குறுந்தொகை 234

மிளைப்பெருங்கந்தன் பாடிய பாடல் 234
  சுடர் செல் வானம் சேப்பபடர் கூர்ந்து,


எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார்மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் 
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை துணை இலோர்க்கே.


  உரை:-
    முல்லை நிலத்தில்,
 மாலை நேரத்தில் கதிரவன் மறையும் போது வானமே சிவந்த நிலையில் இருக்கும் அதை தான் காதலர்களை மயக்கும் மாலை நேரம் என்பார்கள், முல்லை பூ மலர்ந்தால் மாலை என்பார்கள் உண்மையில் அது மாலை ஆகாது கணவனை பிரிந்த நிலையிலும் கூட. காலையில் சேவல் கூவும் போது வானம் சிவந்து தான் இருக்கும்  காலை பொழுதும் மாலை பொழுதாக தான் இருக்கும்
 என்று முல்லை நிலத்தில் தலைவி தோழியிடம் சொல்லு ஆருதல் அடைகிறார்

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்