குறுந்தொகை 193

அரிசில் கிழார்  பாடிய பாடல் 193

  ''மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன


இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை 
தட்டைப் பறையின்  கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும்முல்லை முகை நாறும்மே.

உரை;-
  
   முல்லை நிலத்தின் தலைவனை பிரிந்த தலைவி
தோழியே உன் மேனி மனக்கிறதே சென்ற மாதம் முழுநிலவில் முல்லை மலரை அணிந்துகொண்ட என்னவர் என்னை தழுவினார் அந்த மனம் இன்னும் போகவில்லை ,  தேன் உற்றி வைத்து இருக்கும் கலையம் போல நீர் நிரைந்து இருக்கும்  மலை ஊற்றில்  இருக்கும் தவளை தட்டையில் இருந்து வரும் சத்தம் போல எழுப்பும் நாட்டின் தலைவன் அவர் என்று முல்லை நில இடைச்சி கூறுகிறார்,

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்