Posts

நற்றினை

 நற்றினை 21      விரைப்   பரி   வருந்திய   வீங்கு   செலல் இளையர் அரைச்   செறி   கச்சை   யாப்பு   அழித்து   அசைஇ , வேண்டு   அமர்   நடையர் ,  மென்மெல   வருக ! தீண்டா   வை   முள்   தீண்டி   நாம்   செலற்கு ஏமதி ,  வலவ ,  தேரே !  உதுக்   காண்              உருக்குறு   நறு   நெய்   பால்   விதிர்த்தன்ன அரிக்   குரல்   மிடற்ற   அம்   நுண்   பல்   பொறிக் காமரு   தகைய   கான வாரணம் பெயல்   நீர்   போகிய   வியல்   நெடும்   புறவில் புலரா   ஈர்   மணல்   மலிரக்   கெண்டி ,            நாள்   இரை   கவர   மாட்டித்   தன் பேடை   நோக்கிய   பெருந்தகு   நிலையே ! பொருள்:-        கோழிகள் எப்போதும் அன்புக்கு எடுத்துக்காட்டு தான் நாம் வீட்டி...

FIRST FREEDOM HERO

Image
    மாவீரன் அழகுமுத்துகோன்  யாதவ்                 தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய  மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.  எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது. "மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்"   என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,  "தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்  "  என்ற வீரன் அழகு...

நந்த கோபர்

Image
      ஆயர்குல தலைவர்  நந்த கோபர்       தமிழ் சங்க தலைவரே நந்த கோபர்    திருவாவடுதுறை ஆதீனம் செப்பேடு   ஆ தொண்டைமானார் வங்கிஷத்தில் ரெகுனாதத் தொண்டைமானாரவர்கள் ராஜ்யம்பண்ணி வருகுற னாளையில் அம்ன்பத்தாறு தேசத்தில் இருக்கப்பட்ட பாவமில்லாத குலத்தார் மாயனை வளத்தவர் ஆயகுலத்தோர் யகதிகவி கொண்டவர் ஆயற்பாடித் தலைவர் பொங்கிய மதுரையில்ச் சங்கத்தை வென்றவர் முல்லைக்கதிபர் முல்லையந்தார் மார்பர் (கெருட) கெருடக்கொடி யாதிபர் அவ்வை பாடல் கொண்டோர் துற்கைபாத சேகரர் முருகனுக்கு குலவை யளித்தவர் அரசர் மூவருக் கன்னங் கொடுத்தவர் சோழனுக்கு முடிசூட்டினவர் தக்கனுக்குக் கிறவிடை கொடுத்தவர் கோகுலம் காவலராகிய அன்பத்தாறு ராஜ்யத்தில் இருக்குற நந்த கோபாலர்  👈🏻   ஆ  தொண்டைமானார்  ஐன்பத்தாறு   தேசங்களில்  இருக்கப்பட்ட 1)பாவமில்லா குலத்தவர். ... இதை தான் ஆண்டாளும் இவ்வாறு பாடுகிறார்... " கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே" ...

உழுது ஆயர்

Image
உழவு செய்யும் ஆயர்கள்     பெரும்பாணாற்றுப்படை        முள் உடுத்து - - - எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பின் பிடிக் கணத்தன்ன குதிர்உடை முன்றில் களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர் குறும்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடும் சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில் பருவ வானத்துப் பாமழை கடுப்பக் கருவை வேய்ந்த கவின்குடிச் சீறுர் நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன . . குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப் புகள் இணர் வேங்கை வீ கண்டன்ன - அவரை வான்புழுக்கு அட்டிப் பயில்வுற்று இன்சுவை மூரல் பெறுகுவீர் ‘ .’ - ‘ இந்த பாடல் கூறும் விளக்கம்  ஆயர்கள் வாழும் ஊருக்குல்  செல்லும் போது  முட்களால் ஆன தொழுவும் அமைத்து அது காடுகள் போல உள்ளது,அதனுள் ஆநிரைகள்  இருக்கும்,  பிறகு ஊருக்குல் செல்லும் போது, அங்கே, வரகு போன்ற விலை உயர்ந்த கதிர்கள் கொட்டி இருக்கும், அது காட்டு யானைகள் போல பரந்து இருக்கும் வரகு அரிசி, அவ்வாறு உழுது வாழும் ஆயர்மார்கள் வாழ்கை பரந்து இருக்கும், நெல்அரிசியே தினை அரிசி  முட்டிக்கொண்டு இருக்கும் கதிர்களை குனிந்து அகற்றுவது போல...

சோழன்

      சோழர் சோழன் - இடையன்        தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்  மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல்.              மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலைவாய்க் கோவலர் (இடையர்) வாய் வைத்த குழல். அது தெளிந்த நீரிலே பூக்கும் மணம் மிக்க பூவாலானது. இந்த வளவனை மண்ணுலகைக் காக்கும் காவலன் என்கின்றனர். உண்மையில் அவன் மண்ணுலகைக் காக்கும் காவலன் ஆனால், மாலைநேரங்களில் கோவலனாய் நின்று குழலும் ஊதுகிறாய்,   சோழன் இளவளவன்       பற்றிய பாடல். காதிலி கூறுகிறால்.  #ஆயன் புல்லாங்குழல்  ஊதும் ஓசை தனிமையில் இனிமே தராமல் வேதனை தருகிறது. ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது...... ஆதி சோழ யாதவர்கள் வரலாற்று ஆவணங்கள்..! சிபி போன்ற மன்னர்கள் பரம்பரையில் சோழர்கள் வந்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்ட...

இடைக்காடர்

Image
இடைகாடர்  பாடல்   எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும் எல்லாப் பொருள்களு மெண்ணரிய வல்லாள னாதி பரம சிவனது சொல்லா லாகுமே *கோனாரே*. ✍ வானியல் போல வயங்கும் பிரமமே சூனிய மென்றறிந் தேத்தாக்கால் ஊனிய லாவிக் கொருகதி யில்லையென் றோர்ந்துகொள் ளுவீர்நீர் *கோனாரே* முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது முத்திக் குறுதிகள் செய்யாக்கால் சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ் சேரா வாகுமே *கோனாரே*. ✍ தொல்லைப் பிறவியின் தொந்தமுற் றறவே சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால் எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு இல்லையென் றெண்ணுவீர் *கோனாரே ✍ ஆரண மூலத்தை அன்புடனே பர மானந்தக் கோலத்தைப் பன்புடனே பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப் போதத்தைச் சார்ந்திடு *கோனாரே*. காலா காலங் கடந்திடு சோதியைக் கற்பனை கடந்த அற்புதத்தை நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை நோக்கத்திற் காண்பது *கோனாரே*. ✍ சொல்லருஞ் சகல நிட்கள மானதைச் சொல்லினாற் சொல்லாமல் கோனாரே அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற் அந்தகன் கிட்டுமோ *கோனாரே* சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந் தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே நாரியிடப்பாகன் த...

பல்லவ பேரரசு

     பல்லவப் பேரரசன் நந்திவர்ன் கோன் குலத்தவன் என்பதற்க்கான ஆதாரம் ================================== திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றோர் "வளமருவு மங்கையர்கோன் சொலத்தகுபல் லவராயன் மரபிற் றோன்றிக் களமருவு கறையுடைய கண்ணுதல்கச் சியின் வாழே கம்பரேசற் குளமருவு மன்பினரா யொளிர்மகுட மணிப் பொற்றே ருதவிமேனாள் தளமருவு தாமரைபோன் முகவனியர் படைத்தபுகழ் சாற்றற் பாற்றோ" பாடல் விளக்கம்:- சொல்வளம் பொருந்திய திருவாலி  மங்கைநாட்டின் தலைவனாகிய திருமங்கையாழ்வாரால் போற்றி பாடப்பெற்ற தகுதியை உடைய பல்லவ அரசனான நந்திவர்மகோனின் மரபினில் தோன்றி, விஷமுண்டதால் கழுத்தில் நீலநிற கறையையுடைய காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கு விலையுயர்ந்த மணிகள் பதித்துபொண்னினால் இழைக்கப்பட்ட தேரினை வழங்கிய,  இதழ்விரித்த தாமரை மலர்போல முகம்மலர்ந்த யாதவர்கள் படைத்திட்ட புகழ் ஓங்கியுயர்க இந்த பாடலில் மங்கையர்கோன் என குறிப்பிடப்படுவது திருமங்கை நாட்டின் தலைவனான திருமங்கை ஆழ்வாரை குறிக்கும் நந்தி வர்ம பல்லவன் அவருடைய திருப்பரமேஸ்வரவிண்ணகரப் பதிகத்திலும், திருநந்திபுரவிண்ணகரப் பதிகத்திலும் பின்வருமாறு பாட...