பல்லவ பேரரசு
பல்லவப் பேரரசன் நந்திவர்ன் கோன் குலத்தவன் என்பதற்க்கான ஆதாரம்
==================================
திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றோர்
"வளமருவு மங்கையர்கோன் சொலத்தகுபல்
லவராயன் மரபிற் றோன்றிக்
களமருவு கறையுடைய கண்ணுதல்கச்
சியின் வாழே கம்பரேசற்
குளமருவு மன்பினரா யொளிர்மகுட
மணிப் பொற்றே ருதவிமேனாள்
தளமருவு தாமரைபோன் முகவனியர்
படைத்தபுகழ் சாற்றற் பாற்றோ"
பாடல் விளக்கம்:-
சொல்வளம் பொருந்திய திருவாலி மங்கைநாட்டின் தலைவனாகிய திருமங்கையாழ்வாரால் போற்றி பாடப்பெற்ற தகுதியை உடைய பல்லவ அரசனான நந்திவர்மகோனின் மரபினில் தோன்றி, விஷமுண்டதால் கழுத்தில் நீலநிற கறையையுடைய காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கு விலையுயர்ந்த மணிகள் பதித்துபொண்னினால் இழைக்கப்பட்ட தேரினை வழங்கிய, இதழ்விரித்த தாமரை மலர்போல முகம்மலர்ந்த யாதவர்கள் படைத்திட்ட புகழ் ஓங்கியுயர்க
இந்த பாடலில் மங்கையர்கோன் என குறிப்பிடப்படுவது திருமங்கை நாட்டின் தலைவனான திருமங்கை ஆழ்வாரை குறிக்கும்
நந்தி வர்ம பல்லவன் அவருடைய திருப்பரமேஸ்வரவிண்ணகரப் பதிகத்திலும், திருநந்திபுரவிண்ணகரப் பதிகத்திலும் பின்வருமாறு பாடப்பட்டுள்ளான்
"பல்லவன் வில்லவனென்று உலகில்ப்பலராய் பலவேந்தர் வணங்குகழல் பல்லவன்",
"தேர்மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல்வாட்டிய திண்சிலையோன்",
"நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர்வேல் நெடுவாயிலுலகச் செருவில்முன்நாள் பரந்தவன்",
"வெண்குடைநீழல் செங்கோல்நடப்ப விடைவெல்கொடிவேற்ப்படை முன்உயர்த்த பண்புடைப் #பல்லவர்க்கோன்",
"உலகுடைமன்னவன் தென்னவனைக் கன்னிமாமதிள்சூழ் கருவூர்வெருவ, பலபடைசாயவேன்றான் ",
"விடைத்திறல்வில்லவன்நென் மெலியில் வெருவச்செருவேல்வலங் கைப்பிடித்த படைத்திறல் #பல்லவர்க்கோன்",
"கறையுடைவாள் #மறமன்னர்கெடக் கடல்போல் முழங்கும் குரல்கடுவாய், பறையுடைப் #பல்லவர்க்கோன் ",
"நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே"
ஒரு தோழி தன் தலைவியின் நிலை கண்டு வருந்துவதாக ஒரு பாடல் காணலாம். இந்தத்தலைவி தேச பண்டாரி எனும் பட்டப் பெயருடைய நந்தி மன்னன் மீது காதல் கொண்டாள். அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். கனவு கண்டு அதில் அம்மன்னன் தன் படுக்கையில் வருவதாக மகிழ்கிறாள். ஆனால் நனவில் அவன் வராததால் துன்புறூகிறாள். ஆயர்கள் ஊதுகின்ற புல்லாங்குழலின் இன்னிசைக்கே அவள் வருந்துகிறாள். இவள் மாமரச் சோலையில் வாழ்கின்ற குயிலின் குரலைக் கேட்டால் என்ன பாடுபடுவாளோ என்று தோழி தலைவி நிலைகண்டு இரங்குகிறாள்.
"ஆயர் வாய்க்குழல் காற்றுஉறு கின்றிலள்
ஏயும் மாங்குயில்க் கென்னைகொல் ஆவதே
தேயம் ஆர்புகழ்த் தேசபண் டாரிதன்
பாயல் மேல்வரல் பார்த்துநின்றாளுக்கே"
இவ்வாறு நந்திக் கலம்பகத்தின் பாடல்கள் எல்லாச் சுவைகளும் நிரம்பி, அகத்துறையும் புறத்துறையும் கலந்து, சொல்நயமும் பொருள்நயமும் கொண்டு படிப்போரின் சிந்தனையும் தூண்டி இன்பம் தருகின்றன.
தமிழ்கூறும் நல்லுலகில் சிற்றிலக்கிய வரிசைகளில் நந்திக் கலம்பகத்திற்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு என்று துணிந்து கூறலாம்.
இவ்வாறு திருமங்கையாழ்வாரால் போற்றி பாடப்பட்ட பல்லவ பேரரசன் நந்திவர்ம கோன், யாதவர்கள் வம்சத்தவர்கள் என சிலையெழுபது பாடலின் மூலமாக அறியமுடிகிறது.....!!!...
Comments
Post a Comment