நந்த கோபர்
ஆயர்குல தலைவர் நந்த கோபர்
தமிழ் சங்க தலைவரே நந்த கோபர்
திருவாவடுதுறை ஆதீனம்
செப்பேடு
ஆதொண்டைமானார் வங்கிஷத்தில் ரெகுனாதத் தொண்டைமானாரவர்கள்
ராஜ்யம்பண்ணி வருகுற னாளையில் அம்ன்பத்தாறு தேசத்தில்
இருக்கப்பட்ட பாவமில்லாத குலத்தார்
மாயனை வளத்தவர் ஆயகுலத்தோர் யகதிகவி கொண்டவர்
ஆயற்பாடித் தலைவர் பொங்கிய மதுரையில்ச்
சங்கத்தை வென்றவர் முல்லைக்கதிபர் முல்லையந்தார்
மார்பர் (கெருட) கெருடக்கொடி யாதிபர் அவ்வை பாடல்
கொண்டோர் துற்கைபாத சேகரர் முருகனுக்கு குலவை
யளித்தவர் அரசர் மூவருக் கன்னங் கொடுத்தவர்
சோழனுக்கு முடிசூட்டினவர் தக்கனுக்குக் கிறவிடை
கொடுத்தவர் கோகுலம் காவலராகிய அன்பத்தாறு
ராஜ்யத்தில் இருக்குற நந்த கோபாலர் 👈🏻
ஆ தொண்டைமானார் ஐன்பத்தாறு தேசங்களில் இருக்கப்பட்ட
1)பாவமில்லா குலத்தவர்....
இதை தான் ஆண்டாளும் இவ்வாறு பாடுகிறார்...
"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம்பொற்கொடியே"
போர் குற்றம் புரியாத கரந்தை வீரர்கள் பாவமில்லாத குலத்தவர்
2)மயனை வளர்த்தவர்.....
நந்த கோபர் தன் சகோதரரான வாசுதேவன் புதல்வன் மாயனாகிய கண்ணனை வளர்த்தவர்.....
3)ஆயகுலத்தவர்.....
இவர் அ எனும் பசுக்களை காக்கும் ஆயர் குலத்தவர்(யாதவ குலத்தவர்)....
நிகண்டுன் படி யாதவம்...பசுக்கூட்டம்...
அ...பசு....
ஆயர்....பசுவை காப்பவர்..
4)பொங்கிய மதுரையில் சங்கத்தை வென்றவர்......
ஆழியில் பாண்டிய அரசு அழிந்த போது மதுரையில் தமிழ் சங்கத்தை அமைத்த பாண்டிய மரபினர்.
இவரே மதுரை தமிழ் சங்க தலைவர் ஆவார்.
இராசசிம்மப்பாண்டியன் சின்னமென்னூர் செப்பேடில்
"மாபாரதம் தமிழ்படுத்தும்,
மதுராபுரிச் சங்கம் வைத்தும்"
கூறப்பட்டுள்ளது,
5)முல்லைக்கதிபர்......
முல்லை நிலத்தின் தலைவர்...அரசர்...
அதாவது தோன்றல்,அண்ணல்,குறும்பொறை நாடன் எனும் தலைமை பெயர்களுக்கு சொந்தகாரர்.....
6) கருடகொடி யதிபர்.....
யாதவர்களின் கொடி கருடகொடி....
இந்த கருட கொடியின் அதிபதி நந்தகோபர்....
ஏன் எனில் இவரைதான் யாதவ குலத்தின் தலைவராக புராணங்கள் கூறுகிறது.....
இவருக்கு பின் கோகுல நந்தன் கிருஷ்ணன் கருடகொடியின் அதிபராகிறார்....
சங்க இலக்கியத்தில்
#புட்கொடி என்று கூறும் கருடகொடி
கண்ணக்கு உரியது
புறநானுறு 56
"பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்,
என்ற பாடல் விளக்குகிறது,
நந்தகோபர் கருட கொடியை தான் பிற்காலத்தில் கிருஷ்ணனும் பயன்படுத்தி உள்ளார்,
ஔவையார் பாடல்
மெய்வந்த கோவலர் தங்குலத் தாரை வெறுங்குலத்தோர் கைவந்த நஞ்சொலின் வாய்வெந் திடுமந்தக் காரணங்கேள் ஐவந்த வேள்வியில் ஐவர்க்குத் தெய்வமும் ஆகிநின்ற தெய்வம் பிறந்த குலங்காணும் நந்தன் திருக்குலமே
என்ற ஔவையார் பாடல் படி நந்தமன்னன் ஆயர்கள் தலைவர் என்பது உறுதி ஆகிறது
7)முருகனுக்கு குலவை அளித்தவர் .......
குலவை என்பது நாக்கு சுழலுவந்தால் வரும் ஒளி
தான் பேரன் பார்வதி மைந்தன் முருகனுக்கு
பேச கற்று குடுத்தவர்கள் ஆயர்கள்....
முருகனுக்கு குலவை கற்று குடுத்து பேச்சாற்றல் அளித்தவர்கள் ஆயர்கள் ஆதலால் நந்தகோபர் அப்பெயரை பெறுகிறார்....
8)அரசர் மூவர்க்கு கன்னங் கொடுத்தவர்......
அரசர் மூவர் என்பது சேர, சோழ, பாண்டியர்கள்....
இவர்களை பாரதத்திற்க்கு அளித்த(கன்னங் கொடுத்தவர்) யது வம்சத்தவர்கள்.....
9)சோழர்க்கு முடி சூட்டியவர்.....
சோழனுக்கு முடி சூட்டியவர்கள் ஆயர்குல யாதவர்கள்....
10)தக்கனுக்கு கிறவிடை அளித்தவர்....
தக்கன் பிரமனின் மகன் அவனுக்கு வேள்வியும் பணிக்கு உதவியவர்...
11)கோகுலத்தில் காவலர் .....
இவ்வளவு பெருமைக்குரியவர் கோகுலத்தின் காவலரான நந்த கோபர் ஆவார்...
என்கிறது ஆவணம்...
இடையன் தமிழன் இல்லை தமிழை கொடுத்தவன் ஆகையால் தான் வள்ளுவரும் பாடினர் ஆயன் பற்றி
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.,
எனும் ஆயனின் புகழை.....
வாழ்க யாதவம்....
Comments
Post a Comment