குறுந்தொகை 126
ஒக்கூர் மாசாத்தி பாடிய பாடல் 126
இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?'' என,பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி! நறுந் தண் காரே.
உரை:-
தலைவி கூறுகிறால் தோழியிடம்
கார்காலம் வந்து விட்டது மழை பேய்ந்து முல்லை மலரும் மலர்ந்து விட்டது, அது என்னை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்கிறது இளமையே எண்ணி பார்க்காமல் உன்னை விட்டு சென்று விட்டார், பொருள் தேடி சென்றுவிட்டார் எங்கே இருக்கார் என்று கூட தெரியவில்லை என்று என்னைய பார்த்து சிரிக்கிறது,
Comments
Post a Comment