குறுந்தொகை 183
ஔவையார் பாடிய பாடல் 183,
''சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
இதுவே முல்லை நிலத்தில் காதல்,
''சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.
உரை:-
முல்லை நிலத்தில் பொருள் தேடி சென்ற தலைவனை நினத்து தலைவி நினைவு
கணவர் செல்லும் தேசத்தில் கொன்றை மலர்கலும் மலர்ந்து இருக்கும் அதை காணும் போது எனது மேனியும் அதை போல கருமஞ்சல் நிறம் போல இருக்கும் என்பது அவருக்கு தோணாதா, அவர் செல்லும் வழியில் பெண் மானை விட்டு ஒடிய ஆண் மானை காண மாட்டாரா அதை கண்டு திரும்பி வரமாட்டாரா, அவர் காட்டுவழியிலே பொருள் தேடி செல்கிறார் அங்கே மயில் இருக்கும் கிடக்கும் காந்தாள் மலரும் மலர்ந்து இருக்கும் இதை கண்டும் வாரமாட்டாரா என்று இடைச்சி ஏங்குகிறாள்,இதுவே முல்லை நிலத்தில் காதல்,
Comments
Post a Comment