யாதவர் பற்றி

     யாதவர்

    வினைவிளை கால மெனறீர் "யாதவர்"
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி- சிலப்பதிகாரம் ( பதிகம்)

தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி
வாயெடுத் தரற்றிய மணிமே கலையார்
"யாதவள்" துறத்தற் கேதுவீங் குரையெனக்- சிலப்பதிகாரம்.

கூறுக மாதோநின் கழங்கின் திட்பம்
மாறா வருபனி கலுழுங் கங்குலின்
ஆனாது துயருமெங் கண்ணினிது படீஇயர் எம்மனை முந்துறத் தருமோ
தன்மனை உய்க்குமோ " யாதவன்" குறிப்பே.- அகநானூறு

“நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன; 
 வேதி "யாதவர்" தம்மைவே திப்பன; 
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய; 
வாதி மாலவன் காணா வளவின - 
பெரிய புராணம்.

 திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே "யாதவனே" என்றவனை  - ஆழ்வார் பாடல்.

நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் "யாதவரும்" படைத்த முனிவன் அவன் நீ -ஆழ்வார் பாடல்.

ஏதி "யாதவர்" ஏழ் திறல் கொங்கணர்
சேதி ராசர் தெலுங்கர் கருநடர்
ஆதி வானம் கவிந்த அவனி வாழ்- கம்பராமாயணம்.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்