யாதவரா? கோனாரா?
ஒரு பார்வை
இன்று பல யாதவ இளைஞர்கள் மத்தியில் இருப்பது
நாம் யாதவரா கோனாரா என்று
சில பேரு கோனார் தான் யாதவர் இல்லை என்றும் கூறுகிறார்கள்,
🌹யாதவம்
அதை பார்க்கும் முன்பு சில விசயத்தை நாம் பார்ப்போம்
இந்த யாதவர்கள் என்று அழைக்கப்படும் முல்லைநில மக்கள் யார்?
அவர்களின் தொழில் என்ன?
ஆநிரை மேய்ப்பது பழம்காலத்தில்
ஆயவெள்ளத்தார் மெய்யை விடாதே சூழ்ந்து புறங்காப்ப,
(என்பது பாடல்)
என்று ஆநிரைய காப்பவன் என்றும் கூறுகிறது,
🌹 சரி இந்த மக்கள் தான் இந்தியா முழுவதும் இருக்க ஒரே இனமா?
என்று பார்க்கலாம்
இங்கே தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம்
என்ன கூறுகிறது என்றால்?,
மாயோன் மேய காடுறை யுலகமும்
என்கிறார்.!
தொல்காப்பியம்
யார் அந்த மாயோன் ?
துவாரகைய ஆண்ட கண்ணன் தான் அந்த மாயோன்,
அவன் தான் முல்லைநில கடவுளாக பாவிக்கப்பட்டான்,
இந்த கண்ணனை வழிபடும் மக்களை தான் யாதவ் என்கிறார்கள்
சில பேருக்கு கடவுள் என்றால் அனைவரும் வணங்குவார்கள் என்றும் கூறுவர்
உதாரணம் புத்தரை சீன தேசத்திலும் வணங்கு கிறார்கள் என்று கூறலாம்
அதைய சங்க,
இலக்கியம் ஆதரமாக பார்த்தால் புரியும்
திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது*l
அதாவது காட்டில் வாழும் இடையன் அங்கே இருக்கும் பசும்பாலை காய்ச்சி நெய்யாக்கி அதை நெய்யில் சோறாக்கி உன்வானாம்
குறுந்தொகை 210
பாடலில் காக்கை பாடினியார் பாடுகிறார்
அடுத்து
வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை,
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம்செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பிடி உணீஇயர்
👉வடக்கே யமுனை நதிக்கரையில் ஆயர் மகளீர்கள் நீராடிக்கொண்டு இருந்து. ஆய்ரமகளீரிடம் கிளைகளை உடுதத்துக்கொள்ளுமாறு குரந்தைமரத்தை வளைத்து குடுத்தான் கண்ணன்.
என்று
அகநானூற்று பாடல் 59 பாடியுள்ளார்
மதுரை மருதனிளநாகனார்
இந்த இரு பாடல்களில் கூறுயவர் ஆயர்களை யாதவர் என்றும் கூறு வில்லை கோனார் என்றும் கூறவில்லை,
ஆயர்கள் இடையர்கள் என்றும் கூறவில்லை
அண்டர் என்றே கூறியுள்ளனர்,
அதற்காக அண்டர் என்றால் முல்லைநில ஆயர்கள் இல்லை என்று கூற முடியுமா?
முல்லைநில நில ஆயர்களுக்கு சங்க காலத்திலே பல பெயர்கள் உள்ளது,
அடுத்து
தென்னகத்து முல்லை மக்கள் & வடதேசத்து முல்லை மக்கள்
இவர்கள் இருவரும் யார்?
இவர்களின் தொழில் பற்றி பார்ப்போம்
தமிழகத்தில் இருக்கும் ஆயர்கள் அதாவது யாதவர்கள்
வடதேசத்தில் இருக்கும் யாதவர்கள் அதாவது ஆதி ஆயர்கள்
இருவரின் குலதொழில் ஆநிரை மேய்ப்பது
அதை சங்க இலக்கியத்தை வைத்து சிலவை பார்க்கலாம்
மாயோன் மேய காடுறை யுலகமும் -முல்லை
சேயோன் மேய மையவரை உலகம் -குறிஞ்சி
வேந்தன் மேய தீம்புனல் உலகம் -மருதம்
வருணன் மேய பெருமணல் உலகமும் -நெய்தல்
இவ்வாறு தொல்காப்பியர் நானிலமாகவும் நான்கு கடவுகளாகவும் கூறுகிறார் தமிழ் மக்களை
இன்றிய குறிஞ்சி மக்கள் வெட்சி தினைக்குறியவர்கள்,
அவர்கள் ஆநிரை கவர்வதும் கிடையாது ,
செவ்வேளுக்கு விழா எடுப்பது இல்லை,
மருதநிலத்தவர்கள் இன்று தனி உழவர்களாகவும் கிடையாது அனைத்து மக்களும் விவசாயம் செய்கின்றன, வேந்தனுக்கோ இந்திரவிழாவோ எடுப்பதும் கிடையாது,
நெய்தல் நில மக்கள் மட்டும் இல்லை அனைவரும் கடலில் விவசாயம் செய்கிறார்கள்
வருணனுக்கு விழாவும் எடுப்பது இல்லை,
பாலை நிலத்து ஏயினர் இன்று அவர்கள் போருள் ஈட்டுவதற்காக தலைவிய பிரிவதும் இல்லை
கொற்றவைக்கு என்று விழாவும் எடுப்பது இல்லை,
ஆனால் முல்லைநில மக்கள்
வடதிசையாக இருந்தாலும் சரி தென்திசையாக இருந்தாலும் சரி
இரண்டு விசயத்தில் அவர்கள் எந்த மாற்றமும் கிடையாது ஆநிரை மேய்ப்பதும் கண்ணனை வழிபடுவதும் கண்ணனை அனைவரும் வழிபடுகிறார்கள் ஆனால் தான் கோவிந்தன் இனம் என்று கூறி தன்னோட குல தொழிலையும் கைவிடாமல் இருப்பது
இந்த யது வம்சம் மட்டும் தான் கல்யாணம் வைபோகமாக இருக்கட்டும் எநத ஒரு விழாவிலும் வடமதுரை மைந்தன் இல்லாமல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்,
இன்று இந்த பாரததேசம் பலவிதமான படையெடுப்பகளை சந்தித்துள்ளது பல மொழி மக்கள் உறுவாகிவிட்டன ஆக யாதவர்கள் என்பவர் ஒரு தாய் மக்கள் தான் அவர்களின் மொழி வேறுபாடுகள் இருந்தாலும் குலதோழில் கடவுள் வழிபாடு கண்ணன் தான் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை,
🌹தன் மாமன் மகள் நம்பினைய ஏழு ஏறு தழுவி மணந்தான் கண்ணன் அதேவே இன்று ஜல்லிக்கட்டு ஆனாது
அந்த மாயோன் யார் அவர் துவாரகையதிபதி இன்றைய குஜராத்
சிந்திசமவெளி ஆய்வில் கிடைத்தும் உள்ளது ஏறுதழுதல் பற்றியும்
இப்போது கூறிய சில தகவல் படி யாதவர்கள் என்பவர்கள் ஒரே குடும்பம் அதாவது கிருஷ்ணன் வம்சம் என்று ,
அடுத்து யாதவர் வட சொல்லா தமிழில் இல்லையா?
கடந்து 30 ஆண்டுகள் தான் யாதவர்கள் தமிழகத்தில் பயன்படுகிறதா?
என்ற பல குலப்பங்களுக்கு சற்று ஒரு பார்வை பார்க்கலாம்
யாதவம்
பிரித்தால்
யா + தவம் = யாதவம் ஆகிறது
அதைய வேளீர்களை வைத்து பார்ப்போம் ,
புறநானூறு 201
பாடலில் வருகிறது,
நீயே,
வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகை, துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே
👉 அதாவது வேள்வியில் தோன்றியவர்கள் என்றும்
துவராகைய ஆண்ட கண்ணன் வம்சத்தில் நாற்பத்தொன்மதாவது தலைமுறை என்றும் வடதேசத்து முனிவரால் தென்திசை வந்த வேளீரில் வேள் வடபால் முனிவன் என்றால் (அகத்தியர்)
(புறம் 201)
அது போக தொல்காப்பியம் என்ன சொல்லுது என்று பார்ப்போம்,
சொல்லதிகாரம்
அவ்வழி அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்,
அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்,
அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்,
யாவன், யாவள் யாவர் என்னும் ஆவயின் மூன்றோடு அப் பதினைந்தும் பால் அறி வந்த உயர்திணைப் பெயரே
முல்லை உயர்திணை மக்கள்,
ஆண் : யா+அவன் = யாதவன்
பெண்: யா+அவள் =யாதவள்
பொது:யா +அவர் =யாதவர்
ஆக யாதவர் என்பது தமிழ் தொல்காப்பியத்திலே உள்ளது யாதவர்
அதை ஏன் மறைந்தார்கள் என்பதை பிறகு ஒரு நாள் பார்க்கலாம்
சரி யாதவர் என்ற பெயர் வேறு எங்கே உள்ளது ஏறாலம் உள்ளது ஆனால். அதில் ஒன்றை பார்க்கலாம்
ஔளையார் பாடியது தனிப்பாடல் திரட்டு
வாதவர்கோன் பின்னையென்றான்
வத்தவர்கோன் நாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்றும்
இல்லையென்றான் ஆதலால்
வாதவர்கோன் பின்னையிலும் வத்தவர்கோன் நாளையிலும்
யாதவர்கோன் இல்லை இனிது
🌹என்று பாடியுள்ளார்கள்
கோன் என்றாலும் கோபன் என்றாலும் அரசன் மற்றும் ஆயனை தான் குறிக்கும்
ஆகையால் நான் கண்ணனை நந்தகோபர் மகன் ஆகிறார்
கோபன் ,கோவன் என்பவை அனைத்து முல்லைநில தலைவர்களையும் குறிக்கும் சொல்
அடுத்து
சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த பொன்வண்ணத்தந்தாதி
222 ல்
ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன் போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று மாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண் டொழிஇனி ஆரணங்கே
என்றும் கூறுகிறார்கள்
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் இராசசிம்மப்பாண்டியன் சின்னமென்னூர் சேப்பேடில் கூறிகிறது,
மாபாரதம் தமிழ்படுத்தும்,
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
கூறப்பட்டுள்ளது,
இந்த கிருஷ்ணன் யார் அவரின் தோற்றம்
என்ன?
வான் இளவரசு வைகுந்தக்
குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி
அடுத்து
தேகவியின் மகனாக கண்ணன்
செம் பெருந் தடங் கண்ணன் திரள் தோளன்
தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
இவ்வாறு ஆயர்கள் தான் வடதேசத்து யாதவர்கள் அனைவரும் ஒரே இனமக்கள் என்பதையும் பார்த்தம் ஆனால் இந்த யது வம்சத்தை சாதியில் சேர்த்தது தான் வேதனை,
அடுத்து
இங்கே பாரத தேசத்தின் முதல் விடுதலை வீரர் மாவீரர் அழகுமுத்துகோன்
யாதவரா கோனாரா என்று சில யாதவ இளைஞர்களை வினாவுகிறார்கள் யாதவர் என்பதே கடந்த 25 ஆண்டுகளுக்குள் தான் என்றும் கூறுகிறார்கள்
ஔளை பிராட்டி பாடியதை அவர்களுகளிக்கு தெரியாது போல
இப்போது, நாம் இணைத்தது அய்யா அழகுமுத்துகோன் யாதவ் அவர்களின் வாரிசு ஆகியா துரைசாமிசேர்வை யாதவ் அவர்களின் 1954 ஆம் அண்டு பள்ளி சான்றிதழில் அவருக்கு யாதவர் என்று தான உள்ளது,
இதிலும் சிலர் கூறுவும் வாய்ப்பு உள்ளது அழகுமுத்துகோன் யாதவ் கோனார் இல்லை தமிழர் இல்லை என்று கூட கூறுவார்கள்
அதற்காக தான் திவ்ய பிரபந்த பாடலை பார்த்தால் புரியும்
ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
கோனார் கொழியக் கோவர்த்தனத்து
செய்தான் மலை
என்று பாடுகிறார் நம்மாழ்வார் அவர்கள்
சரி அடுத்து பாரத்தால்
மாயோன் அருளியா கீதையில்
ஸகேதி மத்வா ப்ரஸபம் யத் உக்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி
தமிழ் தேசியம் பேசும் கோனார் அதாவது யாதவர்கள்
யாதவர் என்பது இப்போது வந்தது தான் என்றும் கடந்த 25 ஆண்டுகள் தான் என்று அறிவுகூர்மையாக கூறுகின்றனர்
சரி தமிழ் வேதமான திவ்ய பிரபந்தம் கூறியது ஔவையார் பாடியது அறியாட்டாலும்
இயந்திர உலகமாகிய பிறகும் இவர்கள் ஊணமாகவே இருக்கிறார்கள்
இதோ உங்களுக்காக
1947. யாதவன் நாளிதழ்
1948 யாதவன் நாளிதழ்
1970 யாதவன் மித்திரன்
1971 யாதவன் மித்திரன்
என்றும் இருந்துள்ளது
அடுத்து கோனார் ஆயர் பட்டம் வட தேசத்தில்
ஒர் பார்வை
கோனார்தான்.. கோனார் என்பது பட்டம்... ஆயர் என்பது ஆயர் மக்கள் வாழும் பகுதி.. இடையர் என்பது தொழில் சார்ந்த பெயர்..
ReplyDeleteநான் பேசுவது சொல்வது 50,000 ஆண்டுகளுக்கு முன் இருந்து கொண்டு இருக்கிற கொணர்களை பற்றி.. நீங்கள் சொல்வது 1947 நாளிதழ் பற்றி நீங்கள் பேசுவது தமிழர் அல்லாத மற்ற இன ஆடு மாடு மேய்பவர்களை..
அதாவது என் நண்பர் பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்தவர் அவரும் ஆடு மாடு தொழில் கொண்டவர் அவரையும் நீங்கள் யாதவ் என்று சொல்வீர்கள்..
என் பpaaட்டன் காலத்தில் யாதவ் என்றால் யாரு என்று தெரியாது...
தமிழ்நாட்டில் வாழும் இடையர்கள் கோனாரே யாதவ் இல்லை...
அப்படியா ஆடு மாடு மேய்ப்பவர்கள் யாதவர்களா.... சரி சரி... எதுல யாதவர்கள் ஆடுமாடு மேய்க்குறவங்கனு போட்டுருக்கு... பகவான் கிருஷ்ணன் யாதவனா கோனாரா சொல்லு.... தமிழ்நாட்டுல எந்த இடத்துல கண்ணா பிறந்தா.... சொல்லு இல்லேன்னா உத்தரப்பிரதேசத்துல காரகிரகம் போயிருக்கயா நீ... கண்ணா உத்தரப்பிரதேசத்துல ஆடு மாடு மேய்ச்சனான் அவன் எப்படில கோனார்.. அவன் யாதவன்.... கண்ணனை கோனார்னு சொல்ற ஆதாரம் இருந்தா காட்டுல நீ
Delete
Delete》》 தம்பி.. எவன் ஒருவன் இந்த நிலத்திற்கு குடியேறி அனாதையாக வந்தானோ அவனே தன் அடையாளம் தெரிய கூடாது என்பதற்கு யாதவ் என்று ஒரு கிழிந்த நரி தோலை போர்த்திக்கொண்டு.. திரிபவர்கள் மட்டுமே யாதவ் என்பவர்கள்...
》》 நீ பாடம் எடுக்கிற அளவுக்கு முட்டாள்கள் யாரும் இல்லை.. இடையர், கோனார் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள்.. யாதவ் என்பவர்கள் கண்டம் விட்டு, கண்டம் வந்த... தான் யாரென்று தெரியாத அனாதைகள்..
》》 வரலாறு, உயிரியல் தெரியாத முட்ட்டாள்கள் பதிவுகள் போடுவது காலத்தின் கொடுமை ..🤦♂️🤦♂️🤦♂️
இந்த பதிவு போட்ட நபர விட ஒருபடி மேல இருக்கா . தெரியலனா கம்முனு இருக்கனும் உனக்கு தெரிஞ்சா கதையா போட்டு விட்டாய்.
Deleteயாது என்பது செம்மறி ஆட்டின் சத்தம் மடையனே. செம்மறி 🐑 யா யா என்று ஆரம்ப ஒலி அதை நீயும் உச்சரித்து பார். பாகவன் கிருஷணன் மேய்த்தது கோ(பசு) என்றால் உனக்கு தெரியாத கோனார். மகாபாரத காலத்தில் மலைகுரவர்(கௌரவர்)கேரள தேசமும், பாண்டவர்(பாண்டியர்) திருநெல்வேலி, இவர்களுக்கு இடையில் மாடு 🐮 மேய்க்கும் கோனார்கள்(கிருஷ்ணா), ஆடு 🐐 மேய்க்கும் இடையர்களும் இருந்துள் ளனர். வடதிசையில் செம்மறி மேய்க்கும் நீ சொல்லுற யது என்று யாதவர்கள். உனக்கு ஒரு விசயம் சொல்லுறேன் கேளு தமிழக நிலபரப்பில் செம்மறி மேய்யுமா, அதன் தோல் மற்றும மூடி குளிருக்கு ஏற்றது. உனக்கு சொன்ன புரியாது வாழும் மக்களிடம் உள்ளது அதன் வரலாறு. இலக்கியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை உனக்கு புரிஞ்சா மாதிரி கதை சொல்லாத. சாதி பெயர் எப்படி வந்துச்சு தொழில் அடிப்படையில் அத ஆராய்ச்சி பன்னு எல்லாம் விளங்கும்.
ReplyDeleteவாழ்தவர் , சேர்ந்தவர் போலவே ஆயர்தவர் என்ற சொல்லும் !
ReplyDeleteஆயர் + தவர்
= ஆயர்தவர்
= யர்தவர்
= யாதவர்
= யாதவ = யாதவ்!
2) ஆயர்தவர்
= ஆயதவர்
= யதவர்
= யதர்
= யூதர்
🤔🤔🤔🤔🤔
ReplyDelete😀😂😂😂 படித்தவர்களே இவ்வாறு அறை குறையாக ஆய்வு செய்வது சகிக்கலை
ReplyDeleteயா என்ற சொல்லி பெயர்ச்சொல் தொடங்காது அறிவாளி ஐயா.
யா என்று சொல்லில் கேள்விச் சொல் மட்டும்தான் தமிழுக்கு உரியது ன. யாது ன, மாங்கு ன, யார் என்பது.